கசகசாவின் நன்மையும் தீமையும் !





கசகசாவின் நன்மையும் தீமையும் !

0
கசகசா... நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் உணவுப் பொருள். ஆனால், இதை வெளிநாடு களுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. 
விதைப் பையிஅதிலிருந்து வடியும் பால் தான் ஓபியம்
குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர் களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது.

சொந்த ஊரில் இருந்த வரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளு க்கு வேலைக்குச் செல்லும் போது, 

ஊறுகாய் பாட்டில் களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற் காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இப்படி தண்டனைக் கொடுக்கும் அளவுக்கு, என்ன தான் கசகசாவில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.

இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப் படுகிறது. 

இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. 

கசகசா வினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்க மின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல்.
அழகும் ஆண்மையும் கூடும்
காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப் படுகிறது. 

மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு.

பாப்பி மலர்கள் அலங்காரத் துக்காக பல்வேறு நாடுகளில் பயன் படுத்தப்படு கின்றன.

இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கி யிருக்கும் பை முற்றி, அது முழுவது மாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப் படுவது தான் கசகசா. 

ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அது தான் ஓபியம்.!

மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. போதை பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். 

இதனால் வளைகுடா நாடுகளில் தடை செய்யப் பட்டுள்ளது. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப் படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள். 
கசகசாவின் நன்மையும் தீமையும்
காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும்.

அதனால் தான், கசகசாவு க்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப் படுகிறது.

கசகசாவுக் காக பயிர் செய்யப்படும் செடிகளி லிருந்து சட்ட  விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.

இந்தியாவை பொறுத்த வரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த் துறை மற்றும் 

சுங்க இலாகா இந்தியாவி லிருந்து வெளிநாடு களுக்கு கசகசாவை உரிய அனுமதி யின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)