தேவையான பொருட்கள்
வேக வைத்த பாஸ்தா – 200 கிராம்
பன்னீர் – 100 கிராம் (துருவவும், சில பீஸ்களை சிறிதாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2-3 (பியூரீ)
பூண்டு – அரை டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – கால் டீஸ்பூன்
கொத்த மல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன்
ஆர்கனோ பவுடர்-1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்-1-2 டீஸ்பூன்
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம், பூண்டு, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை அரைத்து கௌள்ளவும்.
வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும்
தக்காளி, டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளி, டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் வேண்டும் என்றால் சேர்த்து கொண்டு, வதங்கியதும் பன்னீர் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கலவையை வேக விடவும். வேக வைத்த பாஸ்தாவை இதில் சேர்த்து, தீயைக் குறைத்து எல்லாம் சேர்ந்து வரும் போது
ஆர்கனோ பவுடர், கரம் மசாலாத் தூள், கொத்த மல்லித் தழை தூவி இறக்கி, குழந்தையின் லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பவும்.
இது மிக ருசியாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்கள்.