கருப்பை பிரச்சனை குணமாக்கும் மாதுளம் பழம் சட்னி செய்வது !





கருப்பை பிரச்சனை குணமாக்கும் மாதுளம் பழம் சட்னி செய்வது !

0
சூப்பர் புரூட் என்றழைக்கப்படும் மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது. 
மாதுளம் பழம் சட்னி
ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. 

என்றென்றும் இளமையாக இருக்கவும், உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. தினமும் ஒரு கப் மாதுளம் பழச்சாறு குடித்து வர 15 நாட்களில் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரிக்கிறது.
தூங்கி எழும் போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இது தான் !
ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை பிரச்னை போன்றவை குணமாக்குகிறது.

மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும். 

திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். இத்தகைய பல்வேறான பலன்கள் கொண்ட மாதுளம் பழ முத்துகளை கொண்டு சட்னி செய்து சாப்பிடலாம்.

தேவையானவை
மாதுளம் பழம் – 1

இஞ்சி – சிறிய துண்டு

புதினா தழை – 1 கைப்பிடி

பச்சை மிளகாய் – 3

கொத்த மல்லி தழை – 1 கைப்பிடி

வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு

எண்ணெய் – 1 ஸ்பூன்
ஆண்களுக்கு மட்டும் அடிக்கடி சிறுநீர் வருவதற்கான காரணம் தெரியுமா?
செய்முறை :
மாதுளம் பழம் சட்னி செய்வது !
முதலில் கொத்த மல்லி, புதினாவை நன்றாக கழுவி வைக்கவும். மாதுளம் பழத்தி லிருந்து முத்துக் களை தனியாக எடுத்து வைக்க வேண்டும் .
வயிறு செய்யும் வேலைகள் என்ன?
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் புதினா, கொத்த மல்லி, பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.

ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் மாதுளை முத்துக்கள், உப்பு, சீரகத் தூள் சேர்த்து நன்றாக அரைத்து பரிமாறவும்.

இந்த சட்னியை புலாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு கலந்த கலவை யாக இது இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)