சுவையான பரங்கிக்காய் பிரியாணி செய்வது எப்படி?





சுவையான பரங்கிக்காய் பிரியாணி செய்வது எப்படி?

0
பரங்கிக்காய் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது. பூசணிக்காய் சாப்பிடுவது மழைக் காலத்திலும் குளிர் மற்றும் இருமலில் பெரும் நிவாரணம் கிடைக்கிறது. 
சுவையான பரங்கிக்காய் பிரியாணி செய்வது எப்படி?
பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், விரைவாக குணமடையவும் உதவுகின்றன.

குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்றும் சொல்வர். பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. 

குளிர்ச்சி உடம்பு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். 
சரி இனி பரங்கிக்காய் கொண்டு சுவையான பரங்கிக்காய் பிரியாணி செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 
தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப்,

தோல் சீவி, கேரட் துருவியில் துருவிய பரங்கிக்காய் (பழம் கூடாது) - ஒரு கப்,

எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்,

கொத்தமல்லி - சிறிதளவு,

உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க:

புதினா - 6 டேபிள் ஸ்பூன்,

கொத்த மல்லித் தழை - 4 டேபிள் ஸ்பூன்,

தேங்காய்த் துருவல் - கால் கப்,

வேர்க்கடலை - கால் கப்,

பச்சை மிளகாய் - 3,

இஞ்சி - ஒரு சிறிய துண்டு,

மஞ்சள் தூள் - சிட்டிகை,

சின்ன வெங்காயம் - 6.
செய்முறை:
சுவையான பரங்கிக்காய் பிரியாணி செய்வது எப்படி?
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற விடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். 

குக்கரில் எண்ணெய் விட்டு பரங்கிக்காய் துருவலை வதக்கி, பின்னர் அரைத்த விழுதை பச்சை வாசனை போக வதக்கி, 

மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, அரிசி சேர்த்து கிளறி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)