விடுமுறை நாட்களில் குழந்தை களுக்கு மாலையில் வித்தியாசமாக ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 1 கப்
பிரட் – 3 துண்டுகள்
உருளைக்கிழங்கு – 1/2
வெங்காயம் – 1
கொத்த மல்லி – சிறிதளவு
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
ரவை – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
பன்னீரை துருவி கொள்ளவும்.
வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து பன்னீருடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பிரட் துண்டுகளின் முனைகளை நீக்கி விட்டு, அதனை நீரில் ஒருமுறை நனைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு, பன்னீருடன் சேர்த்து பிசையவும்.
அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ரவை, தக்காளி சாஸ் அனைத்து பொருட்களை யும் ஒன்றாக சேர்த்து
நன்கு மென்மை யாகும் வரை பிசைந்து உருண்டை களாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு மென்மை யாகும் வரை பிசைந்து உருண்டை களாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டை களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
சுவையான பன்னீர் பிரட் பால்ஸ் ரெடி!!!