ஆனியன் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?





ஆனியன் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?

0
குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு எளிதில் சுவாசிக்க உதவுகிறது. வெங்காயத்தில் வைட்டமின் E அதிகம் உள்ளதால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தடுக்கிறது. 
ஆனியன் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?
வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது. ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்னைகள் குணமாகும். 

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வரக் காரணம் அவற்றில் காணப்படும் சல்பெனிக் அமிலம். திரவ வடிவில் இருக்கும் சல்பெனிக் அமிலமானது வெங்காயம் வெட்டும்போது காற்றுடம் கலந்து ஆவியாக மாறுகிறது. 

எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய இந்த அமிலம் காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்து விடுகிறது. வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணீர் வராமல் இருக்க அதன் தோலை உரித்த பின் நன்கு கழுவ வேண்டும். 

அதன்பின் அறிந்தால் கண்ணீர் வராது. சரி. எவ்வளவோ காய்கறிகள் உள்ளபோது வெங்காயத்தை அரிந்தால் மட்டும் கண்ணீர் வருவது ஏன்? 
இதற்குக் காரணம் வெங்காயத்தில் புரொப்பேன் தயால் எஸ் ஆக்ஸைடு எனும் ஒரு வேதிப் பொருள் இருப்பதால் தான். இந்த வேதிப்பொருள் வெங்காயம் அரியும்போது கண்களைத் தாக்கி அதனால் கண்ணீர் வரவழைக்கிறது.

தேவையான பொருட்கள்:-
சிக்கன் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 150 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன்

மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கொத்த மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை :-
ஆனியன் சிக்கன் வறுவல் செய்வது
சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும். சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுக ளாக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் சிக்கனை போட்டு வதக்கவும்.

பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும். (இடையில் கிளறி கொள்ளவும்.)

சிக்கன் வெந்து, தண்ணீர் வற்றியதும் நறுக்கி வைத்திருக்கும் மீதி வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் கொத்த மல்லித்தழை தூவி இறக்கி விடவும்.
இதை சாம்பார், தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். இதனுடன் குடை மிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல சுவையுடன் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)