காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுகாக !





காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுகாக !

0
மல்டிநேஷனல் கம்பெனில வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க பாஸுங்க்கிட்ட நல்ல பேர் வாங்கி என்னைப் போல ஆளுண்டா? ன்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டிக்குவாங்க. 
காய்கறி வாங்குவது

ஆனால், வீட்டு விஷயங்களில் மட்டும் ஆண்கள் அத்தனை சாமர்த்தியமா நடந்துக்க மாட்டாங்க.

அதுலயும் முக்கியமா காய்கறி வாங்குறதுல இவங்க வாங்குற பல்புங்க இருக்கே. அட அட அதை வெச்சு ஒரு ஊரையே இருட்டில்லாம ஆக்கலாம். அப்படி பல்ப் வாங்குவாங்க.

கத்திரிக்காய் சொத்தையா இருக்கும். இல்லாட்டி முள்ளங்கி முத்தலா இருக்கும், அப்படியில்லையா? கீரை பூச்சியடிச்சு இருக்கும்.., 

கொத்து மல்லி அழுகியிருக்கும், வாழைத்தண்டு நாராயிருக்கும், தக்காளி காயா யிருக்கும், 

அவரைக்காய் வதங்கி இருக்கும்…., இப்படி எத்தனை எத்தனையோ…, ஆக மொத்தம் பாஸ் மார்க் வாங்கவே திணறிப் போவாங்க. அதனால, சக ஆண்பதிவர் களுக்கு இந்த டிப்ஸ்.

இதை படிச்சு நல்லா உருவேத்தி காய்கறி வாங்குறதுல பாஸாகுங்க.

* முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.

* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.

* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.

* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில் கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக்கீரை போன்ற வற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.
சைவ பிரியர்களுக்கு

* வெண்மை யாகவும், அழுத்த மாகவும் இருந்தால் மட்டுமே காலி ஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.

* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்ற வற்றை வாங்கும் போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. 

நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.

* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக் கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.

* நன்றாகப் பழுத்த தக்காளி களை விட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.

* வாழைத் தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்,நூல் தெரிந்தால் ஓ.கே!

* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்று நினைக்காதீர்கள். 

அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்ணீர். மூன்றில் ஒன்று தான் சாதம் / டிபன்.

*தேங்காய் ஆட்டி பார்த்து உள்ளே நல்லா தண்ணி இருக்குற காயா பார்த்து வாங்கணும்

*முட்டைகோஸ் இலை பிரியாம கொஞ்சம் பச்சை நிறமா இருக்குறதை வாங்கணும்.

*வெங்காயம் வாங்கும் போது, மேற்பாகமும், கீழ் பாகமும் அதிகம் வளராமலும், நீள்வாக்க்கில் இல்லாமல் உருளையாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.

*கத்திரிக்காய் வாங்கும் போது அழுத்தி பார்த்து கல் போலில் லாமலும், காம்புகள் நீளமாகவும், மேல் தோல் காயை விட்டு பிரியாமலும் இருக்க வேண்டும்.

அசைவ பிரியர்களுக்கு:
அசைவ பிரியர்களுக்கு

*மீன் கடையில் பச்சை கலர் பெரிய ஈ சுத்தக் கூடாது . வயிற்றுப் பகுதி வீக்கமாகவோ உடைந்தோ இருக்க கூடாது.

*எந்த மீனுமே புதிதானால் கவுச்சி வாடை இருக்காது. செவுலும் கண்ணும் பாத்து வாங்கனும். மீனின் மேற்பரப்பு பளபளன்னு வழு வழுப்புடன் இருந்தாலே புதிதாக இருக்கும்

*தேளி, கெண்டை, கெளுத்தி மீன், போன்றவை வறுக்க நல்லா இருக்கும்.

*டேம் கெளுத்தி, ஜிலேபி, விரால், போன்ற மீன்கள் குழம்பு வைக்க நல்லது. ஆட்டுகறி வாங்கும் போது கால் தொடைக்கறி வாங்குனா நல்லாருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)