நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள் !





நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள் !

அறுவகைச் சுவைகள்

காரம்:

உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும். கிடைக்கும் 

உணவுப் பொருட்கள்: 
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்ற வற்றில் அதிகப் படியான காரச்சுவை அடங்கி யுள்ளது.

கசப்பு:

உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தி கூட்டும். சளியைக் கட்டுப் படுத்தும். கிடைக்கும் 

உணவுப் பொருட்கள்: 

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்ற வற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

இனிப்பு:
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் 

உணவுப் பொருட்கள்: 

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங் களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கி யுள்ளது.

புளிப்பு:

இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் 

உணவுப் பொருட்கள்: 

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு:

இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மை யுள்ளது. கிடைக்கும் 
உணவுப் பொருட்கள்: 

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கி யுள்ளது.

உப்பு:

ஞாபக சக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் கிடைக்கும் 

உணவுப் பொருட்கள்: 

கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற வற்றில் அதிகமாய் இருக்கின்றது.
Tags: