நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !





நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !

மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு பல பிரச்சனைகளை குணப்படுத்த இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணங்கள் நிறைந்த ஆயுர்வேத மருத்துவத்தின் ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். 
நெல்லிக்காய் ஜூஸ்
உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கிய மாக இருக்க வேண்டு மென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.
கொழுப்புக்கள் கரையும்:

நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக் களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். 

எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.

எலும்புகள் ஆரோக்கியமாகும்:

எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். 
ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

புற்றுநோய்:

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. 
இது ப்ரீ -ராடிக்கல் களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்று நோயில் இருந்து நம்மைத் தடுக்கும். எனவே புற்று நோய் வராமலிருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் ஜூஸை பருகுங்கள்.

உடல் சூடு தணியும்:
உடல் சூடு தணியும்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
மிகவும் ஆரோக்கியமான 20 உணவுகள் !
இரத்தம் சுத்தமாகும்:

நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். 

மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.

சரும அழகு மேம்படும்:

முக்கியமாக நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கிய மாக வைத்துக் கொள்ளும். 
சரும செல்கள் ஆரோக்கிய மாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும்.
Tags: