ஷாஹி காளான் பிரியாணி செய்வது எப்படி?





ஷாஹி காளான் பிரியாணி செய்வது எப்படி?

0
காளான்கள் கொழுப்பைக் குறைக்கும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முதலான பல்வேறு பலன்கள் அதை உண்பதால் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 
ஷாஹி காளான் பிரியாணி செய்வது எப்படி?
காளான்கள் பல வடிவங்களில் இருப்பதை நாம் பார்த்திருப்போம். சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி காளான்களை தங்கள் உணவுகளில் மக்கள் சேர்த்துக் கொள்கின்றனர். 

காளான்கள் பொதுவாக காய்கறிகளின் பிரிவில் வைக்கப் படுகின்றன. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப் படுத்துகிறது. 

பற்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது.

தேவையான பொருட்கள்:

சாதத்திற்கு...

பாசுமதி அரிசி - 2 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கிராம்பு - 4

கருப்பு ஏலக்காய் - 1

மிளகு - 4

உப்பு - தேவையான அளவு

காளான் மசாலாவிற்கு...

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கிராம்பு - 2

மிளகு - 4

கருப்பு ஏலக்காய் - 2S

பட்டை - 1 இன்ச்

வெங்காயம் - 1 கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

காளான் - 200 கிராம்

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
அலங்கரிக்க...

வெங்காயம் - 1/2 கப்

முந்திரி - 5-6

குங்குமப்பூ - 1 சிட்டிகை (1 டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைத்தது)

கொத்தமல்லி - 1 டீஸ்பூன்

செய்முறை:
ஷாஹி காளான் பிரியாணி செய்வது எப்படி?
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சாதத்திற்கு...

முதலில் அரிசியை நன்கு கழுவி, நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, ஏலக்காய் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் வறுக்க வேண்டும். 
பின்பு அரிசியை அத்துடன் சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து, 

அரிசி யானது முக்கால் பாகம் வெந்ததும், அதனை இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

காளான் மசாலாவிற்கு...

காளானை நன்கு கழுவி, சிறு துண்டுக ளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, மிளகு, பட்டை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 
வெங்காய மானது பொன்னிற மானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பின்பு மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். 
அடுத்து அதில் காளானை சேர்த்து, மூடி வைத்து, காளானை வேக வைக்க வேண்டும். 

காளானானது நன்கு வெந்து, தண்ணரானது வற்றியதும், அதில் கொத்த மல்லியை தூவி இறக்க வேண்டும்.

அலங்கரிக்க...
ஷாஹி காளான் பிரியாணி
வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரியையும் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரியாணி...

ஒரு அகன்ற வாணலியில் மூன்றில் ஒரு பங்கு சாதத்தைப் போட்டு, அதன் மேல் காளான் மசாலா சிறிதளவு பரப்பி, மீண்டும் பாதி சாதத்தைப் போட்டு, 

மறுபடியும் மீதமுள்ள அனைத்து காளான் மசாலாவையும் பரப்பி, இறுதியில் மீதமிருக்கும் சாதத்தைப் பரப்பிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் அனைத்து பொருட்களும் ஒன்று சேரும் வரை, மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.

இறுதியில் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரியை தூவி, குங்குமப்பூ பாலை ஊற்றி, கொத்தமல்லியை தூவி அலங்கரி த்தால், சுவையான ஷாஹி காளான் பிரியாணி ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)