தேவையான பொருட்கள் :
கோழி கறி – 200 கிராம்,
மஞ்சள் தூள் – 5 கிராம்,
மிளகாய்த்தூள் – 10 கிராம்,
மல்லித்தூள் – 10 கிராம்,
கரம் மசாலா – 5 கிராம்,
தயிர் – 10 கிராம்,
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 10 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது – 20 கிராம்,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து,
பச்சை மிளகாய் – 2.
செய்முறை :
கோழி இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத் தூள், தயிர் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் .
இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைத்து கொள்ள வேண்டும். பிறகு தவாவில் எண்ணை சேர்த்து சிக்கன் துண்டுகளை இரண்டு பக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.
அரிசி சக்கையா? சத்தா?
சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் அதன் நடுபாகத்தில் சிறிதாக துளையிட்டு அதில் பச்சை மிளகாயை வைத்து வேக விடவும்.
பச்சை மிளகாய் வெந்ததும் அதன் சாறு சிக்கனுள் இறங்கி, அதன் சுவை வித்தியாச மானதாக இருக்கும்.