என்னென்ன தேவை?
கேரட் துருவல் - 1 கப்,
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4, புளி - பாக்கு அளவு,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
விரும்பினால் நறுக்கிய இஞ்சி - சிறிது.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காய வைத்து கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து கேரட் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி இறக்கவும்.
ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.