காய்கறிகளில் சத்துக்குறைவு ஏற்படுகிறது எப்படி?





காய்கறிகளில் சத்துக்குறைவு ஏற்படுகிறது எப்படி?

0
பால் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது டீக்கோ பயன்படுத்தக் கூடாது.
சத்துக்குறைவு

உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. பிரீசரில் உருளைக் கிழங்கை வைத்து எடுக்கும் போது அது உருளைக் கிழங்கை மென்மை யானதாக மாற்றி விடும். 

இந்த உருளைக் கிழங்கை சமைக்கும் போது அது உங்களின் உணவின் சுவையை மாற்றும். மேலும் அதில் உள்ள சில சத்துக்களும் வெளியேறுகிறது.

முட்டையை பிரீசரில் வைக்கக் கூடாது. முட்டையில் உள்ள நீர்ச்சத்துக்கள் உறையும் போது அதன் பரப்பளவு அதிகரிக்கும், இதனால் முட்டையின் ஓடு உடையவோ அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படவோ வாய்ப்புள்ளது.
அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு போதும் பிரீசரில் வைக்காதீர்கள். 

குறிப்பாக வெள்ளரிக்காய், கீரை, தர்பூசணி போன்ற பொருட்களை வைத்தால் அவற்றில் உள்ள நீர்ச்சத்துகள் ஐஸ் கட்டிகளை உருவாக்கி விடும். 

பிறகு அதனை உபயோகப் படுத்தும் போது அதன் உண்மையான சுவையும், வடிவமும் காணாமல் போயிருக்கும். சில சத்துக்களை யும் இழக்க நேரிடும்.

பிரீசரில் இருந்து எடுத்து சமைத்தது போக மீதம் உள்ள இறைச்சியை ஒருபோதும் மீண்டும் பிரீசரில் வைக்காதீர்கள். ஏனெனில் அப்படிப் பட்ட இறைச்சிகள் சாதாரண இறைச்சியை விட இரு மடங்கு பாக்டீரியாக் களை ஈர்க்கும். 
இதற்கு ஒரேவழி தேவைப்படும் போது மட்டும் இறைச்சி வாங்குவதுதான். சாப்பாட்டை வீணாக்க கூடாது என்பதற்காக அதனை பிரீசரில் வைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. 
காய்கறி

ஆனால் இது மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். இதனால் ஆபத்து இல்லை யென்றாலும், அந்த சாப்பாட்டில் சுவையோ, சத்துக்களோ எதுவும் இருக்காது.

மீதமான குழம்பை என்ன செய்வது என்ற குழப்பம் பெரும்பாலும் அனைத்து சமைய லறையிலும் தோன்றும் ஒரு பிரச்சினை யாகும். பிடித்த குழம்பாக இருந்தால் அதனை பிரீசரில் வைத்து சாப்பிடும் பழக்கம் கிட்டத்தட்ட அனைவரு க்கும் உள்ள ஒரு பழக்கமாகும். 
பிரீசரை விட்டு எடுத்தபின் அந்த குழம்பு மிகவும் கட்டியாக மாறிவிடும். மேலும் இது சமைத்த போது இருந்த சுவையுடனும் இருக்காது. உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமானது பூண்டு. 

தேசிய உணவு பாதுகாப்பு மையத்தின் ஆலோசனைப்படி பூண்டானது பிரீசரில் வைக்கப்படும் போது கடினமானதாக மாறி விடும், மேலும் அதன் சுவை கசப்பாக மாறி விடும். 

இந்த பூண்டை உணவில் சேர்க்கும் போது அது உணவின் மொத்த சுவையையும் மாற்றக் கூடும். பிரீசரில் வைப்பதால் உணவின் சுவையை மாற்றுவது பூண்டு மட்டுமல்ல, 

வெங்காயம், மிளகாய் போன்ற பொருட்களின் சுவையும் கூட மாறக்கூடும். இவை மட்டுமின்றி மிளகு, பச்சை மிளகாய், கிராம்பு போன்ற பொருட்களும் கூட பிரீசரில் வைக்கும் போது தன் சுவையை இழக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)