தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - 10
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 இன்ச்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
தேன் - தேவையான அளவு
செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
நெல்லிக் காயில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு துண்டுக ளாக்கிக் கொள்ளவும்.
நெல்லிக் காயை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தண்ணீரைத் தவிர்த்து அனைத்து பொருட்களை யும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரிமாறினால், நெல்லிக்காய் மசாலா ஜூஸ் ரெடி!
குறிப்பு:
மரபணு வரைபடங்கள் அறிந்து கொள்ள?இந்த வடிகட்டிய நெல்லிக்காய் சாற்றினை காற்றுப் புகாத பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.