சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா தெரியுமா?





சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா தெரியுமா?

0
உணவு போதை ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடலுக்குத் தீங்கு விளை விக்கும் உணவுகளை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நாம், உணவு போதை பற்றி அதிகம் அறிந்திருப்ப தில்லை.
சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா

காரணம்… நாம் உணவை போதையாகப் பார்ப்ப தில்லையே! பீட்சா போன்ற அதிகம் பதப்படுத்திய உணவுகளை அடிக்கடி உண்பதால், சாப்பிடுவதில் கோளாறுகள் (Eating disorders) ஏற்படு வதோடு, அவற்றுக்கு அடிமை யாகவும் (Addiction) வாய்ப்பு உள்ளதாக ஓர் ஆய்வில் கண்டறிந் துள்ளனர்.
வைரலான ஓரின ஈர்ப்பாளர்களின் போட்டோ - சுவாரஸ்ய தகவல்?
மிச்சிகன் மற்றும் கொலம்பியா பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பருமன் ஆராய்ச்சி மையம் மனிதனை அடிமைப் படுத்தும் உணவு களை கண்டறியும் சோதனையை மேற்கொண்டது.

மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 120 மாணவர்கள் மற்றும் 400 இளைஞர் களிடத்தில் 35 வகை உணவுகளைக் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இந்த ஆய்வுக் குழுவின் தலைவரும், மனநல நிபுணருமான ஆஷ்லே கெய்ஹார்ட் ‘ஃபுட் அடிக்‌ஷன் அளவுமானி’ மூலம் இவர்களிடம் சோதனை செய்ததில், போதை உணவுகளின் வரிசையில் சாக்லெட் முதல் இடம் பிடித்தது. அடுத்த இரண்டு இடங்களை ஐஸ்க்ரீமும் பீட்சாவும் பிடித்தன.
சன் கிளாஸ் தேர்வு செய்வது !
இந்தப் பட்டியலில் பிரெஞ்ச் ஃப்ரை, குக்கீஸ், சிப்ஸ், சிக்கன் ஃப்ரை என எண்ணெயில் பொரித்த மற்றும் அதிகம் பதப்படுத் தப்பட்ட உணவுகளே அதிக இடம் பிடித்தன. இவை அனைத்தும் நடத்தைக் கோளாறு களுக்கு காரண மானவை என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.

எப்படி?

மனிதனின் மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சி போன்ற உணர்வு களுக்கு காரணமான ஹார்மோன் களை சுரக்கச் செய்வதில் உணவின் பங்கு அதிகம்.

குறிப்பாக டோபமைன் (Dopamine) மற்றும் அட்ரினலைன் (Adrenaline) ஹார்மோன்கள் சுரப்புக்கு உணவு காரணமாகிறது.

உதாரணமாக சாக்லெட், ஐஸ்க்ரீம், மைதா உணவுகளான பீட்சா, பர்கர் மற்றும் சோளமாவு, உருளைக் கிழங்கு, மது போன்ற வற்றை உட்கொள்ளும் போது மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தும் டோபமைன் ஹார்மோன் சுரக்கிறது.

சிலர் காபி, டீ குடிக்கும் போதும் சிகரெட் பிடிக்கும்போதும் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு கிடைப்பது போல உணர்வார்கள். கஃபைன், புகையிலைப் பொருட்கள் ஆகியவையும் சுறுசுறுப்பு தரும் அட்ரினைல் ஹார்மோன் சுரப்புக்குக் காரண மாகின்றன.

”ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் கட்டாயத்தில் இருக்கும் போதோ, அந்த வேலை சலிப்பூட்டும் போதோ, மகிழ்ச்சி யையும் சுறு சுறுப்பையும் தரும் உணவுகளை உண்ண ஆரம்பிக்கும் நீங்கள், நாளடைவில் உங்களை அறியாமலேயே அந்த உணவு களுக்கு அடிமையாகி விடுகிறீர்கள்.
சமாதியில் தன் சொகுசு காரை புதைத்த கோடீஸ்வரர் !
சில வருடங்கள் இந்தப் பழக்கத்தை தொடரும்போது மூளையின் நரம்பு மண்டலத்தை தாக்கி உங்கள் செயல்களை முடக்கி விடுகிறது. கட்டுப் பாட்டை இழக்கும் மூளை சுயநினைவை இழக்கிறது.

பதற்றம், விரக்தி போன்ற விபரீத செயல்பாடு களுக்கும் தூண்டப்படுகிறீர்கள்” என்று எச்சரிக்கி றார்கள் விஞ்ஞானிகள்!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)