என்னென்ன தேவை
நறுக்கிய குடை மிளகாய் - 1 கப்,
நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
தக்காளி - 1 கப்,
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
முந்திரி - 5,
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கொத்த மல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
முந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த் துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிற மாக வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, குடை மிளகாய் போட்டு வதக்கி, அரைத்த விழுது சேர்க்கவும்.
அனைத்தும் சேர்ந்து நன்கு கொதித்து வந்ததும் கொத்த மல்லித் தழையை தூவி இறக்கவும்.
குறிப்பு :
தேவையானால் பனீரை குடை மிளகாய் வதக்கிய பின்பு சேர்க்கலாம்.