நெல்லிக்காய் விட்டமின்-சி நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது. இன்று நெல்லிக் காயில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் – 5,
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
துவரம் பருப்பு வேக வைத்த நீர் – ஒரு கப்
பொடி செய்ய:
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு,
தனியா – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
நெய் – சிறிதளவு.
தாளிக்க:
எண்ணெய், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பொடி செய்யக் கொடுத்துள்ள வற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
நெல்லிக் காயை கொட்டை நீக்கி துருவிக் கொள்ளவும்.
துருவிய நெல்லிக் காயுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின்னர் பருப்பு வேக வைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி – இஞ்சி விழுது சேர்த்து,
உப்பு போட்டு ஒரு கொதி விட்டு கொத்த மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும் (விருப்பப் பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)
சத்தான நெல்லிக்காய் பருப்பு ரசம் ரெடி.