தேவையான பொருள்கள் :
முட்டை - 4
பட்டாணி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வெந்தும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்த மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான முட்டை, பட்டாணி பொரியல் ரெடி.