கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடைபெறும் மாற்றங்கள் !





கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடைபெறும் மாற்றங்கள் !

0
பொதுவாக உணவில் நறுமண த்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப் பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைக ளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? 
கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடைபெறும் மாற்றங்கள் !
கறிவேப்பிலை யில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்ட மின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ள து. மேலும் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம்.

ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  அதிலும் இதனை தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைக ளெல்லாம் பெறலாம் என்று தெரியுமா?
மன அழுத்த அதிகமானால் முது வலி உண்டாகும் !
கொழுப்புக்கள் கரையும் 

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப் படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடைபெறும் மாற்றங்கள் !
இரத்த சோகை 

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோய் 

சர்க்கரை நோயினால் பாதிக்கப் பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பி லையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம் 
கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடைபெறும் மாற்றங்கள் !
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலை யில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

முடி வளர்ச்சி 

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள். 
சளித் தேக்கம் 

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறி விடும்.

கல்லீரல் பாதிப்பு நீங்கும்
கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடைபெறும் மாற்றங்கள் !
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளை விக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறி விடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல் படவும் தூண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)