கன்னடர் மற்றும் தெலுங்கர்களின் புத்தாண்டு தினமான தெலுங்கு வருட பிறப்பு என்னும் உகாதி பண்டிகை நாளை கொண்டாடப் படுகிறது. இந்நாளில் வேம்பு -வெல்லக் கலவையை உறவினர் களுக்கு கொடுத்து உகாதி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 100 கிராம்,
புளி - 50 கிராம்,
மாங்காய் – 1,
வேப்பம்பூ - அரை கப்,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி - ஒரு துண்டு,
உப்பு - சிறிதளவு
செய்முறை:
வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து ஒரு டம்ளர் அளவுக்குக் கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும். மாங்காயினைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லம், புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்றாகக் கிளறினால் உகாதி பச்சடி ரெடி
வெல்லம் - 100 கிராம்,
புளி - 50 கிராம்,
மாங்காய் – 1,
வேப்பம்பூ - அரை கப்,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி - ஒரு துண்டு,
உப்பு - சிறிதளவு
செய்முறை:
வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து ஒரு டம்ளர் அளவுக்குக் கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும். மாங்காயினைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லம், புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்றாகக் கிளறினால் உகாதி பச்சடி ரெடி
காரணம்:
உகாதி பச்சடியில் சேர்க்கப்படும் வெல்லம், சந்தோஷத்தை குறிக்கும். உப்பு வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும். வேப்பம் பூ வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும். புளி சவாலான தருணங் களை குறிக்கும். மாங்காய் துண்டுகள் புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங் களை குறிக்கும்.
கடைசியாக பச்சை மிளகாய் கோபம் ஏற்படுத்தும் வாழ்க்கையின் தருணங் களை குறிக்கும். சந்தோஷமாக வாழ்ந்திட வாழ்க்கையின் இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே இந்த பச்சடி.