கொழுப்பைக் கரைக்க கூடிய வெண்டைகாய் !





கொழுப்பைக் கரைக்க கூடிய வெண்டைகாய் !

0
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. 
கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்
இதில் உள்ள நார்ப் பொருள்களால் உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) கடந்த கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும்.
இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்ற வற்றால்

யாராவது அவதிகப் பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறு போல் தயாரித்து அருந்தினால் இருமல்,

நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. 
இச்செடியின் வேரைக் காய வைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். 
ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் 

உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்கு கின்றது. நறுக்கும் போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.
இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது.
மலேரியா காய்ச்சலுக்கு புதிய மருந்து !
ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும் போது ருசி குறைந்து விடும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது;

இதயத் துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்க ளால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)