அருமையான தயிர் பிரியாணி செய்வது எப்படி?





அருமையான தயிர் பிரியாணி செய்வது எப்படி?

0
தயிரில் அதிகமான புரோபயாடிக் உள்ளது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியாக துணை புரிகிறது. மேலும் நமது செரிமானத்திற்கும் மெட்டபாலிஸத்திற்கும் தயிர் உதவுகிறது. 
அருமையான தயிர் பிரியாணி செய்வது எப்படி?
நார்ச்சத்து நிறைந்த தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவை ஏற்படாது. உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. 

குறைவான கலோரிகள் கொண்ட தயிரில் நார்ச்சத்து மட்டுமின்றி புரதமும் இருப்பதால், தினமும் இதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.

தயிரில் உள்ள அண்டி ஆக்ஸிடெண்ட் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பளபளப்பான சருமத்தை தருகிறது. மேலும் தயிர் சாப்பிடுவதால் நம் உடலில் கொலஜன் உற்பத்தி அதிகமாகி இளமை தோற்றத்தை தருகிறது.
ஒருசிலர் எந்த நேரமும் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தயவுசெய்து இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்துங்கள். முக்கியமாக இரவு நேரத்தில் தயிர் சாப்பிடாதீர்கள். 

அதையும் மீறி சாப்பிட்டால் வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. சரி இனி ஆட்டு மூளை பயன்படுத்தி டேஸ்டியான ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:
பாசுமதி அரிசி, தயிர் - தலா ஒரு கப்,

கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, குடமிளகாய், பட்டாணி கலவை - ஒரு கப்,

நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்,

ஜாதி பத்திரி - ஒரு துண்டு,

கறுப்பு ஏலக்காய் - சின்ன துண்டு, பட்டை - ஒரு துண்டு,

கிராம்பு - 1,

புதினா - சிறிதளவு,

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

கீறிய பச்சை மிளகாய் - 2,

எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.

செய்முறை:
அருமையான தயிர் பிரியாணி செய்வது எப்படி?
காய்கறி களைத் தோல் சீவி நறுக்கி, சுத்தமாகக் கழுவி, தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நெய்யில் வறுக்கவும். 

குக்கரில் எண்ணெய் விட்டு, ஜாதிபத்திரி, கறுப்பு ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வதக்கவும். தயிர், அதில் ஊறிக் கொண்டிருக்கும் காய்கறி ஆகிய வற்றைச் சேர்க்கவும். 
பிறகு, நெய்யில் வறுத்த அரிசி சேர்த்துக் கிளறவும். தயிர் சேர்த்துள்ள தால், சரியான அளவு தண்ணீர் விட்டு, புதினா தூவி, குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)