என்னென்ன தேவை?
முளை கட்டிய கொள்ளு பருப்பு – 1 கப்,
வெங்காயம் – 4,
பச்சை மிளகாய் – 2, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
பெருங்காயத் தூள், சமையல் சோடா – தலா 1 சிட்டிகை,
கொத்த மல்லித் தழை, கறிவேப்பிலை – சிறிது.
எப்படிச் செய்வது?
கொள்ளு பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து கரகரவென அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சமையல் சோடா, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து
சிறு சிறு உருண்டைகள் செய்து வடை களாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிற மாக பொரித் தெடுத்து பரிமாறவும்.