டேஸ்டியான வாத்துக்கறி கிரேவி செய்வது எப்படி?





டேஸ்டியான வாத்துக்கறி கிரேவி செய்வது எப்படி?

0
வாத்து இறைச்சியில் அதிகளவில் ஒலியிக் அமிலம் எனப்படும் பன்செறிவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. அது மட்டுமல்லாமல் பால்மிடிக் அமிலமும் உள்ளது. 
வாத்து இறைச்சியின் தீவனத்தில் மாற்றம் செய்வதன் மூலம் அதிகளவில் பன்செறிவுறாக் கொழுப்பு அமிலங்கள் உள்ளவாறு மாற்றி அமைக்கலாம். முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பது எல்லாருக்கும் தெரியும். 

முட்டையில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். உலகளவில் கோழி முட்டைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் வாத்து முட்டைகள் அதிகப் புகழ்பெற்று உள்ளது. 
இதனால் மக்கள் வாத்து முட்டைகளை வாங்க தொடங்கி உள்ளனர். கோழி மற்றும் வாத்து முட்டைகள் கிட்டத்தட்ட எல்லா விதத்திலும் ஒன்று போல் தான் இருக்கும். 

ஒரு வாத்து முட்டையை சாப்பிடுவது 11/2 கோழி முட்டை அல்லது 2 கோழி முட்டையை சாப்பிடுவதற்கு சமமாகும். சரி இனி வாத்துக்கறி பயன்படுத்தி டேஸ்டியான வாத்துக்கறி கிரேவி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள்
வாத்துக்கறி -1/2 கிலோ

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

தேங்காய் துருவல் - ¼ கப்

சோம்பு - 1 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பட்டை - 2

கிராம்பு - 2

மிளகு - 5

சீரகம் - ஸ்பூன்

கொத்த மல்லித் தழை - சிறிதளவு
செய்முறை

முதலில் வாத்தை கழுவி சுத்தம் செய்து கிரேவி செய்வதற்கு ஏற்றார் போல் சிறு சிறு துண்டுக ளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

அரைத்து பொடியாக்கி கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மிளகாய் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். 

பின் ஒரு குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்துக் கொள்ளவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். 

வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறி விடவும். 
கிரேவி பதத்திற்கு வந்த பிறகு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள வாத்துக் கறியை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். 

பின்னர் கறிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கறி நன்கு வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கி கொத்த மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வாத்துக் கறி கிரேவி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)