தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணைய் - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு.
செய்முறை:
அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
அதே கடாயில் தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கி எடுக்கவும். சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த் துருவல் அனைத் தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத் தெடுக்கவும். மிளகை நெய்யில் வறுத்து சற்று கொர கொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
இன்னொரு கடாயில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். அதில் மிளகுப் பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும்.
அரைத்து வைத்துள்ள பருப்பு /தேங்காய்ப் பொடி, உப்பு ஆகிய வற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.