தேவையான பொருட்கள் :
(வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)
வாழை மீன் – 3
பொட்டுக் கடலை – 2 டீஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 20 (நீளமாக நறுக்கவும்)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
நாட்டுத் தக்காளி – 4 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
புளிப்பு மாங்காய் – 1
கொத்த மல்லி – ஒரு கையளவு
செய்முறை :
வாழைமீனை (கழுவி) துண்டு, துண்டாக நறுக்கவும்.
தேங்காய் சோம்பு, பொட்டு கடலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
மாங்காயை பெரிய துண்டுக ளாக வெட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் விட்டு சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு மீன், மாங்காய் போட்டு நன்றாக கொதி வந்து மீன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான மீன் குருமா ரெடி.