தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது.
இதனால் செரிமானம், வயிற்றுக் கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம். சிலருக்கு கொய்யாவை விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம். அவர்கள் விதையை எடுத்து விட்டு சாப்பிட வேண்டும்.
அதே சமயம் அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம். கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும். ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம்.
எனவே, கொய்யாவை உண்பதன் மூலம் வாயுவை வெளியேற்றுவது எளிது. சரி இனி கொய்யா பழம் பயன்படுத்தி டேஸ்டியான கொய்யா இட்லி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
இட்லி மாவு - ஒரு கிலோ
கொய்யா (லேசாக பழுத்த நிலையில்) - 3
தேன் - தேவையான அளவு
செய்முறை:
கொய்யாவை சிறு துண்டுகளாகவோ பெரிய துண்டுகளாகவோ நறுக்கி இட்லி மாவுடன் கலக்கவும். தேன் சேர்த்து இட்லித் தட்டில் வேக வைக்கவும்.