தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கிலோ
நடுத்தரமான நேந்திரம் பழம் - 5
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
மைதா, அரிசிமாவு, மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு அனைத்தை யும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டி யாகக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்துத் தேங்காய் எண்ணெயில் சிவக்கப் பொரித்து எடுக்க வேண்டும்.
சூப்பரனா பழம்பொரி தயார்.