மரவள்ளிக் கிழங்கு என்பது !





மரவள்ளிக் கிழங்கு என்பது !

0
மரவள்ளி என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்கா வையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப் படுகிறது. 
மரவள்ளிக் கிழங்கு என்பது !
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. 

வெப்பவலய, துணை வெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளி யிலிருந்து உணவுக்குப் பயன்படக் கூடிய கிழங்கு பெறப்படுகின்றது. 
இது மாவுப் பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போ ஹைட்ரேட்டுக் களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும். 

மரவள்ளிக் கிழங்கு என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக் கப்படும் ஒரு மாவுப் பொருள் சவ்வரிசி ஆகும். 

இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது. மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில் துறைகளில் இது ஒரு மூலப்பொருளா கவும் பயன்படுகிறது. 
மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் காணப்படு கின்றது. 

இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு இனிப்பு மரவள்ளி, கசப்பு மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. 

விபரீத செயலியால் சிக்கிய தோழிகள்... பீம்ராவ் வில்லங்கம்... அரங்கேறும் விபரீதம் !

முறையாகச் சமைக்கப் படாத கசப்பு மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்கக் கூடும். 

கசப்பு மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்ற வற்றை அண்ட விடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் கசப்பு மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர். 

மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். 

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக் கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்து கின்றனர்.
இக்கிழங்கி லிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது. 

உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப் படுகிறது. 
மரவள்ளிக் கிழங்கு என்பது !
மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, 

கையிட்டி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைசீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்சு மற்றும் இந்தோனேசியா ஆகும். 

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்து அந்தரத்தில் வீசி கொடுமை !

உலகெங்கும் சுமார் 15.7 மில்லியன் கே(ஹெ)க்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப் படுகிறது. 

ஒரு கெக்டேருக்கு சராசரி 10 தொன்கள் மரவள்ளிக் கிழங்கு வீதம் 158 மில்லியன் தொன்கள் உற்பத்தி யாகிறது. 

மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் கண்டங்களில் 51.44 மில்லியன் கெக்டேர் அளவில் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆசியா 3.97 மில்லியன் கெக்டேர் அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 

உலகளவில் மரவள்ளிக் கிழங்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் 57%-ம் (சுமார் 95 நாடுகளில்) ஆசியாவில் 25%-ம் விளைவிக்கப் படுகிறது. 
மண் வளம் போன்ற எவ்விதமான வேளாண் சூழலையும் தாங்கி வளரக்கூடிய பயிராதலால் பொருளா தாரத்தில் பின்தங்கிய மக்களின் குறிப்பாக, ஆப்பிரிக்கா, அமெரிக்கா 

உலகில் 256 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்த மனிதர் யார்? தெரியுமா?

மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் ஒரு முதன்மைப் பயிராக மரவள்ளிக் கிழங்கு விளங்குகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)