குன்றிமணியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?





குன்றிமணியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

0
இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளி லும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைக ளாகப் பயன் பட்டன.
குன்றிமணியின் மருத்துவ குணங்கள்
செயல்திறன் மிக்க வேதிப் பொருட்கள் விதைகளில் அபிரின், இன்டோன் ஆல்கலாய்டுகள், டிரை டெர்பினாய்டு சபோனின்கள், ஆந்தசை யானின்கள் உள்ளன. வேர்கள் மற்றும் இலைகளி லும் கிளைசரிரைசா, சிறிது அபிரினும் காணப் படுகின்றன.

விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெயில் கரிம அமிலங்க ளான பால்மிடிக், ஸ்டிராக் ஒலியிக், லினோயிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப் பட்டுள்ளன.
தோல் நோய்கள்: இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுட னான வீக்கங்கள் மீது பூசப்படு கிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும்.

நரம்பு கோளறு களை குணமாக்கும்: வேர் வலுவேற்றி, சிறுநீர் போக்கு, வாந்தி தூண்டுவது, வாய்குழறச் செய்வது, பால் உணர்வு தூண்டுவது, நரம்புக் கோளறு களுக்கு மருந்தாகிறது. கருச்சிதைவு தோற்று விப்பது, விதைகளின் பசை மேல் பூச்சாக தோள் பட்டை வலி, தொடை நரம்பு வலி, மற்றும் பக்க வாதத்தில் பயன்படுகிறது.

முடி வளர குன்றிமணி :
குன்றிமணியின் மருத்துவ குணங்கள்
"கையாந்தகரை சாறு நாலுபலம் எடுத்து ரெண்டு பலம் குன்றிமணிப் பருப்பு கலந்தரைத்து ஒரு பலம் எள் எண்ணெய் சேர்ந்து காய்ச்சி சீலை வடிகட்டி தினம் பூசப்பா கிழவனுக்கு குமரன் போல் சடை காணும்"

என்பது சித்தர் பாடல். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து நல்லெண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். முடி நன்றாக செழித்து வளரும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)