வாயில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க இதை வாயில் போட்டு மெல்வதால் வாயிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதனால் தான் மெந்தோ ஃபிரஸ், சுவீங்கம், மவுத் வாஷ் போன்றவற்றில் கூட இதை பயன்படுத்துகின்றனர்.
இது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய ஒரு தாவரமாகும். நிறைய மருத்துவ குணங்களை கொண்டு இருப்பதால் இந்த புதினா இலைகளை நீங்கள் டீ போட்டு குடிக்கலாம்.
இதன் மூலம் நிறைய நன்மைகளை பெற முடியும். தலைவலி, சீரண சக்தி, வாய் ஆரோக்கியம் என்று நிறைய இடங்களில் பயன்படுகிறது. இந்த இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்களும் நமக்கு உடம்பு வலிகளை நீக்க உதவுகின்றன.
இதன் எண்ணெய்யை தலைக்கு தேய்த்தால் அல்லது உடம்பிற்கு தேய்த்தால் ஒரு குளிர்ச்சி தன்மை கிடைக்கும். இதில் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் மயக்கக்கூடிய பண்புகள் உள்ளன.
இதன் நறுமணம் ஒரு கார்மினேடிவ் ஏஜெண்ட் மாதிரி செயல்பட்டு வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்றுகிறது. சரி இனி ஆட்டு மூளை பயன்படுத்தி டேஸ்டியான ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
இட்லி மாவு – ஒரு கிலோ
புதினா – 100 கிராம்
கொத்த மல்லித் தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – 100
பூண்டு – 100
பச்சை மிளகாய் – 4
செய்முறை:
புதினா, கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சாஸ் போல அரைத்துக் கொள்ளவும்.
சிறிதளவு இட்லி மாவை எடுத்து இட்லித் தட்டில் ஊற்றி, இந்த சாஸையும் கொஞ்சம் ஊற்ற வேண்டும். பின்பு அதன் மேல் கொஞ்சம் மாவை ஊற்றி, சாஸை மறைக்கவும். பின்பு வேக வைத்து எடுக்கவும்.