தேவையானவை
இளநீர் – ஒரு கப்
அகர் அகர் (ஒரு வகை கடல் பாசி) – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வையுங்கள்.
ஐந்து முதல் எட்டு நிமிடம்வரை கிளறுங்கள்.
சிறிது கெட்டி யானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பி விடுங்கள்.
இதே போல் தேங்காய்ப் பாலையும் செய்து முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள்.
அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக் கொள்ளும். பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.