கரம் மசாலா பொடி செய்முறை !





கரம் மசாலா பொடி செய்முறை !

0
பல வகையான கரம் மசாலா பொடிகள் கடைகளில் கிடைக்கின்றன. 
கரம் மசாலா பொடி

ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை யுடனும் வெவ்வேறு மணத்துடனும் இருக்கின்றன.
அதனால் நாம் தயாரிக்கும் உணவு நாம் நினைத்த படி அல்லாமல் உபயோகப் படுத்தும் கரம் மசாலாவை பொருத்தே அமைகிறது.

அதனால் நாமே வீட்டில் தயாரித்தால் நல்ல சுவையுடன் மிகுந்த மண முடையாதாக இருக்கும். இந்த முறை நான் தயாரித்த கரம் மசாலா எப்படி என்று பார்ப்போம் .

தேவையான பொருட்கள் :

மல்லி விதை : 1/4 cup

சோம்பு : 1 Tbsp

சீரகம் : 1 Tbsp

மிளகு : 2 Tbsp

ஏலக்காய் : 2 Tbsp

கிராம்பு : 2 Tbsp

பட்டை பொடி : 1 Tbsp

இலவங்கப் பட்டை : 3 குச்சிகள்

ஜாதிக்காய் : 1/2

அன்னாசி மொக்கு : 4

பிரிஞ்சி இலை : 4

செய்முறை :
கரம் மசாலா

அடுப்பில் வாணலியை வைத்து சூடேற்றவும். முதலில் மல்லியை மிதமான தீயில் எண்ணெ யில்லாமல் வறுக்கவும். 

சாரணியி னால் கை விடாமல் கிளறி விடவும். நல்ல வாசனை வரும் வரை கருக விடாமல் வறுக்கவும்.
வறுபட்ட மல்லியை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். அடுத்து சீரகம் மற்றும் சோம்பு இரண்டையும் சூடு வரும் வரை வறுத்தால் போதும். எடுத்து தட்டில் வைக்கவும்.

இப்போது மிளகை சூடு ஏறும் வரை வறுத்து எடுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு அதே சூடான வாணலியில் மீதி பொருட்களை சூடு பண்ணவும். 

அனைத்தும் சூடு ஆறியதும் மிக்ஸ்யில் பொடி யாக்கவும். சல்லடையால் சலித்து எடுக்கவும். ஒரு சுத்தமான பாட்டிலில் அடைத்து வைக்கவும். 
இப்போது நீங்கள் தயாரிக்கும் பிரியாணி, புலாவ் மற்றும் குருமா ஆகிய வற்றின் வாசனை அருமையாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)