இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா?





இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா?

0
தினமும் சாப்பிடும் உணவு, சரி விகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம், அன்றாடம் சமையலு க்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவை தானா என்று யோசிப்பது இல்லை. 
புற்றுநோய்
அவசரகதியில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்று, சமைக்கவும் சாப்பிடவும் தொடங்குகிறோம். சமைய லறையில் குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம் எனச் நான் ஸ்டிக் பொருட்கள் நிறைந்து கிடக்கின்றன. 

மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்களை இனி அருங்காட்சி யகத்தில் தான் பார்க்க முடியும் என்ற நிலை. 

சமையலு க்குப் பயன் படுத்தப்படும் நவீனமான பாத்திரங் களில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் என்ன, எந்த வகைப் பாத்திரங்கள் பாதுகாப்பான சமையலு க்குத் தேவை, அவற்றை எப்படிப் பயன் படுத்தலாம்

அலுமினியம்

அலுமினியம் என்பது மிகவும் பிரபலமான, விலை குறைவான, மிகவும் குறைவான பராமரிப்பே தேவைப்படும் ஒரு பாத்திரம் ஆகும். அதனாலேயே இது பரவலாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 

இது விரைவில் அதிக சூடாகக் கூடிய ஒரு பாத்திரம் ஆகும். கீறல் விழாத, அனாடைஸ் செய்யப்பட்ட அலுமினிய பாத்திரம் சமைப்பதற்கு மிகச்சிறந்த தேர்வாகும்.
அலுமினியம்
அலுமினிய பாத்திரத்துல சமைக்கும் போது உங்கள் உடலுக்குள் செல்லும் அலுமினிய த்தின் அளவு மிகக்குறைவு தான்.

ஆனால் அமிலத் தன்மை அதிகமுள்ள தக்காளி போன்ற உணவு களை சமைக்கும் போது அது அதிகளவு உணவுடன் கலக்கும். இதனால் அல்சைமர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இரும்பு பாத்திரம்

சமையலு க்கு ஏற்ற மிகச்சிறந்த பாத்திரங் களில் ஒன்று இரும்பு பாத்திரம். இது அதிகம் சூடாவதோடு, இதில் சமைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறைவு தான்.
இரும்பு பாத்திரம்
இதனை பயன்படுத்தி சமைக்கும் போது அது உங்கள் உணவில் சிறிது இரும்பை சேர்க்கும். இரும்பு பாத்திரத்தை எப்பொழுதும் சோப்பு கொண்டு கழுவாதீர்கள்.

இதனால் உலோகம் சிதைய வாய்ப்புள்ளது. எனவே மென்மை யான துணியை கொண்டு மட்டும் இதனை சுத்தப் படுத்துங்கள்.

துருப் பிடிக்காத ஸ்டீல்

இன்று நமது சமைய லறையில் இருக்கும் பாத்திரங்களில் பெரும் பாலானவை இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப் பட்டவை தான்.

எளிதில் வாங்கக் கூடிய இது வெப்பத்தை உங்கள் உணவிற்கு எளிதில் கடத்தக் கூடியது. இது எப்போதும் துரு பிடிக்காது சமைப்பதற்கு மிகச்சிறந்த தேர்வு என்றால் அது இது தான்.

பீங்கான்

இந்த பாத்திரத்தை ஒரு போதும் சமைக்க பயன்படுத் தாதீர்கள், இவை எப்பொழுதும் அலங்காரத்திற் கானவை மட்டும் தான்.
பீங்கான்
இந்த பாத்திரத்தில் உணவு சமைக்கும் போது அது வெளியிடும் வேதிப் பொருட்கள் பல மோசமான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தை களுக்கு இதனால் பல ஆரோக்கிய கோளாறுகள் ஏற்பட  வாய்ப்புள்ளது.

எனாமல் பாத்திரங்கள்

இது அதிகளவு பயன் படுத்தப்படுவ தில்லை, இருப்பினும் இதனை சிலர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
எனாமல் பாத்திரங்கள்
சில பாத்திரங்கள் எனாமல் பூச்சுடன் இருக்கும். இதனால் பாத்திரத்தில் கீறல்கள் விழாது அதே சமயம் வெப்பமும் நன்றாக இருக்கும். இந்த பாத்திரத்தில் சமைக்கும்போது மரக்கரண்டியை பயன்படுத்தவும்.

டெப்லான்

இப்போது அதிகம் பிரபலமாகி வரும் ஒரு பாத்திரம் என்றால் அது டெப்லான் பாத்திரம் தான்.

பிளாஸ்டிக் பூச்சுடன் இருக்கும் இந்த பாத்திரம் விலை குறைவாகவும், சுத்தப் படுத்த எளிதாகவும் இருப்பதால் மக்கள் இதனை அதிகம் உபயோகிக்க தொடங்கி யுள்ளனர்.
டெப்லான்
ஆனால் இது நச்சுத் தன்மை வாய்ந்த ஒன்று, இதில் சமைக்கும் போது அதில் கலக்கும் பிளாஸ்டி க்கும், அதனால் ஏற்படும் புகையும் உங்களுக்கு சுவாசக் கோளாறு களையும், நுரையீரல் பிரச்சினை களையும் உண்டாக்கும்.

இதனை தொடர்ந்து பயன் படுத்தும் போது புற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தாமிரம்

தாமிர பாத்திரங்கள் நமக்கு பல நன்மை களை வழங்கக் கூடியது, ஆனால் தற்போது ஸ்டெயின்லெஸ் பாத்திரத்தில் தாமிர பூச்சுடன் பாத்திரங்கள் கிடைக்கிறது.

இந்த பாத்திரத்தில் சமைக்கும் போது அமிலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும் இதற்கு தொடர்ச்சி யான மற்றும் சீரான பராமரிப்பு தேவைப்படும். இவை மட்டுமின்றி சமைக்கும் பாத்திரத்தில் கவனிக்க வேண்டியவை நிறைய உள்ளது.
தாமிரம்
பாத்திரம் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த பாத்திரமாக இருந்தாலும் அன்டனி உபயோகிக்கும் முன் அதன் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

பாத்திரத்தில் விரிசல் இருக்கிறதா? கைப்பிடிக்கும் இடம் சுத்தமாக இருக்கிறதா என்பதை யெல்லாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் நாம் கை வைக்கும் இடத்தில் தான் அதிகளவு பாக்டீரி யாக்கள் இருக்க வாய்ப்புள்ளது.

நான்ஸ்டிக் பூச்சு இல்லாத பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது. மீதமுள்ள உணவை கண்ணாடி பாத்திரத்தில் வைக்க வேண்டும். அலுமினியம் அல்லது பிளாஸ்டிக் எதுவாக இருந்தாலும் மீதமுள்ள உணவை அதில் வைக்கக் கூடாது.

அலுமினியம் காலப் போக்கில் உடையக் கூடியது, குறிப்பாக கேன் வடிவ அலுமினிய பாத்திரம் விரைவில் உடைந்து விடும். 

பிளாஸ்டிக் பாத்திரத்தில் உணவை வைக்கும் போதும், சூடு பண்ணும் போதும் அது உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயனங் களை வெளியிடும்.

அமில உணவுகள்
அமில உணவுகள்
அமிலம் நிறைந்த உணவுக ளான தக்காளி, எலுமிச்சை, வினிகர் போன்ற பொருட்களை சமைக்கும் போது அவை பாத்திரங்கள் வெளியிடும் உலோகத்தின் அளவை அதிகரிக்கிறது.

இது போன்ற உணவுளை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)