தேவையானவை:
பெரிய பாகற்காய் - 4,
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை,
நசுக்கிய பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன்,
கடலை மாவு - 5 டேபிள் ஸ்பூன்,
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன் (அல்லது காரத்துக் கேற்ப),
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக் கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 15 நிமிடங்கள் ஊற விடவும்.
பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடி கட்டவும்.
(இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது). வடிகட்டிய பாகற் காயுடன் கடலை மாவு, அரிசி மாவு,
மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
எண்ணெயை வடிய விட்டு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.