தேவையானவை
பச்சரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
நெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவை யான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
முதலில் அரிசியை யும் பருப்பையும் ஒன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள்.
பூண்டைத் தோல் உரித்துக் கொள்ளுங்கள்.
அரிசி, பருப்புடன் பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு, 5 கப் தண்ணீரைச் சேர்த்து,
குக்கரில் வைத்து மூடி, 2 அல்லது 3 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்
பிறகு, நெய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.
இந்த ‘பாத்’ துக்கு அப்பளம் அல்லது உருளைக் கிழங்கு பொரியல் நல்ல சைட் டிஷ்.