குழந்தைகளுக்கு இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 1 கப்
வெங்காயம் - 200 கிராம்
புளிக்கரைசல் - கால் கப் ( கெட்டியாக)
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்,
தனியா தூள் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் துருவல் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்த மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கொத்த மல்லி - சிறிதளவு
செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், கொத்த மல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம், தேங்காய், மிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து
ஆற வைத்து அதனுடன், மிளகாய்த் தூள், தனியாதூள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், பெருங்காயம்,
கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், இறால் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
அரைத்த மசாலாவை இறால் குழம்பில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கடாயை மூடி வேக வைக்கவும்.
குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கொத்த மல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழம்பு ரெடி!
சூடான இறால் தீயல் குழம்பை சாதம், அப்பளம், தோசை உடன் சாப்பிடலாம்.