தேவையான பொருட்கள் :
சேப்பங் கிழங்கு : 6 - 8
எண்ணெய் : 2 Tsp
கடுகு : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு : 1 Tsp
காலிப்ளவர் துண்டுகள் [ இருந்தால் ] ; 1/4 கப்
காளான் [ இருந்தால் ] : 3 - 4
உப்பு : 1/2 Tsp
மசாலாவிற்கு :
தேங்காய் துருவல் : 1/4 கப்
சிகப்பு மிளகாய் : 2
சீரகம் : 1 Tsp
பெருஞ்சீரகம் : 1 Tsp
மல்லித் தூள் : 1 Tsp
கறுவேப்பிலை : 10
கொத்த மல்லி : 2 Tsp
புதினா இலைகள் : 10 - 15
பூண்டு : 2 பற்கள்
வெங்காயம்,தோல் நீக்கி பெரிய துண்டுக ளாக்கவும் : 1
உப்பு : 1/4 Tsp
செய்முறை :
கிழங்கை மண் போக கழுவி [ இங்கு கிழங்கு நன்கு கழுவப்பட்டே விற்கப்படும்.]
குக்கரில் நேரிடை யாகவோ அல்லது மற்றொரு பாத்திரத்தில் வைத்தோ வேக வைக்கவும்.
உப்பு சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக விடவும். வெந்ததும் தோலுரித்து வைக்கவும்.
வெங்காயம் நீங்கலாக மற்றனைத் தையும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும்.
பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். கொர கொரவென அரைத்தால் போதுமானது.
கடைசியாக வெங்காய துண்டுகளை சேர்த்து ஒரு சுற்று சுற்றி உடனே நிறுத்தி விடவும்.
வெங்காயம் திப்பி திப்பியாக அரை பட்டால் போதும். தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த வுடன் காலிப்ளவர், உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சத் தூள் சேர்த்து வதக்கி ஓரிரு நிமிடங்கள் தட்டால் மூடி வேக வைக்கவும்.
காலிப்ளவர் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.
இப்போது வெந்த கிழங்கை ஒரே அளவு துண்டுகளாக்கி காளிப்ளவரோடு சேர்க்கவும்.
காளான் எடுத்திருந்தால் அதையும் சேர்த்து ஓரிரு மணித்துளிகள் வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
மிதமான தீயில் வைத்து அடி பிடிக்காமல் அவ்வப்போது கிளறி விடவும்.
மசாலாவின் பச்சை வாசனை போகும் வரையும் தண்ணீர் சுண்டும் வரையும் அடுப்பில் வைத்திருக்கவும்.
தயாரான வுடன் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்த மல்லி மற்றும் கறுவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.