தேவையானவை:
தந்தூரி மசாலாவுக்கு:
தயிர் – கால் கப், மிளகாய்த் தூள்,
இஞ்சி, பூண்டு விழுது, கடலை மாவு – தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
சாட் மசாலா – அரை டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் – கால் டீஸ்பூன்,
காய்ந்த வெந்தய இலை – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
டிக்காவுக்கு:
பனீர் – 250 கிராம் (பெரிய சதுர துண்டுகளாக நறுக்கவும்),
வெங்காயம், குடமிளகாய், தக்காளி – தலா ஒன்று (சதுரமாக நறுக்கவும்),
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
தந்தூரி மசாலாவுக்கு கொடுத்துள்ள வற்றை நன்கு கலந்து தயார் செய்து வைக்கவும்.
இந்த மசாலாவை பனீர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் துண்டுகளில் தனித்தனியே தடவி 20 நிமிடம் ஊற விடவும்.
இதை நீள கம்பியில் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி, ‘க்ரில்’ பண்ணவும்.
‘மைக்ரோவேவ் அவன்’ இல்லாத வர்கள் சூடான தவாவில் எண்ணெய் விட்டு…
பனீர், காய்கறி துண்டுகளை இரு புறமும் சிவக்க விட்டு எடுத்தால் பனீர் டிக்கா ரெடி.