என்னென்ன தேவை?
சதுரமாக நறுக்கிய பலாமோசு (பலாப் பழத்தின் பிஞ்சு) - 1 கப்,
பச்சைப் பட்டாணி - 4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1½ டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், பலாமோசு போட்டு அரை வேக்காடு வேக விட்டு எடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, சோம்பு தாளித்து
நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், உப்பு, பச்சைப் பட்டாணி, பலாமோசு சேர்த்து வதக்கி மூடி வைக்கவும்.
5 நிமிடம் கழித்து பலாமோசு வெந்ததும் தேங்காய்த் துருவலை தூவி நன்றாக கிளறி இறக்கவும்.
சாம்பார், ரசம், குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.