தேவையானவை:
முட்டைகோஸ் – 250 கிராம்,
கேரட் – 50 கிராம்,
பயத்தம் பருப்பு – ஒரு கரண்டி,
துருவிய தேங்காய் – 4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
சின்ன வெங்காயம் – 6,
பச்சை மிளகாய் – ஒன்று,
கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
பயத்தம் பருப்பை உதிர் உதிராக வேக விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து தாளித்து…
நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து வதக்கி…
சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
5 நிமிடத்தில் வெந்துவிடும். பிறகு, வேக வைத்த பயத்தம் பருப்பு, துருவிய கேரட்,
மஞ்சள் தூளை முட்டைகோஸில் சேர்த்து வதக்கி, தேங்காய் துருவலையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:
இந்தப் பொரியலைத் தொடர்ந்து சாப்பிட… குடற்புண் குணமாகும்.