தேவையானவை
பார்லி, பீன்ஸ் – தலா 100 கிராம்
பட்டை, கிராம்பு – தலா 1
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி – தலா 2
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் பார்லி, பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தாளித்துக் கொள்ளவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியதும், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து,
எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும் வரை வதக்கவும்.
வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.