தேவையானவை:
கோஃப்தா செய்வதற்கு:
பனீர் (துருவியது) – ஒரு கப்,
கடலை மாவு – கால் கப்,
ஓமம் – கால் டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்),
கொத்த மல்லி, புதினா – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
கடி செய்வதற்கு:
மோர் – ஒரு கப்,
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மிளகாய் வற்றல் – 3,
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
மோருடன் உப்பு, கடலை மாவு, பெருங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து கட்டி யில்லாமல் கரைத்து,
கடாயில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்தால் ‘கடி’ தயார்.
கோஃப்தா செய்ய கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்து சிறு உருண்டைகள் செய்து, மெதுவாக கொதிக்கும் கடியில் போடவும்.
5 நிமிடம் வேகமாக கொதிக்க விட்டு, பின் மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும் (தேவைப் பட்டால் நீர் சேர்க்கவும்).
தாளிக்க கொடுத்துள்ள வற்றை கடாயில் தாளித்து இதனுடன் சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு:
கோஃப்தா உடைந்து விடும் என நினைத்தால், ஆவியில் 8 நிமிடம் வேக வைத்து பின் சேர்க்கலாம்.