கேழ்வரகு, கோதுமை யில் அதிகளவு சத்துக்கள் நிறைந்த துள்ளது. இன்று கேழ்வரகு, கோதுமை ரவை வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்க லாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – அரை கப்,
முந்திரிப் பருப்பு – 20
கோதுமை ரவை – ஒரு கப்,
அரிசி மாவு – கால் கப்,
கோதுமை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்,
சின்ன வெங்காயம் – அரை கப்,
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கொத்த மல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முந்திரியை துண்டு களாக உடைத்து கொள்ளவும்.
* மிளகை கொரகொரப் பாக உடைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு, ரவை ஆகிய வற்றை போட்டு ஒன்றாக கலக்கவும்.
* இதனுடன் உப்பு, சீரகம், மிளகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்த மல்லித் தழை, முந்திரி சேர்த்து, நீர் விட்டுக் கரைக்கவும்.
(ஒரு பங்கு மாவுக்கு 2 பங்கு நீர் விட்டுக் கரைக்க லாம்). 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.
* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விட்டு முறுகலாக எடுக்கவும்.
* சத்தான சுவை யான கேழ்வரகு – ரவை தோசை ரெடி.