தேவையானவை:
பனீர் – 250 கிராம்,
வெங்காயம் – 2,
மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் – தலா 2,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்,
புளிக் கரைசல் – 3 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
எள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் – தலா 4
டேபிள் ஸ்பூன்,
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்,
தனியா, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் – தலா 3.
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள வற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து…
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். புளிக் கரைசல் சேர்க்கவும். பனீரை ஒரு இஞ்ச் நீளத் துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
மிதமான தீயில் சமைக்கவும். பச்சை வாசனை போனதும், நெய்யில் எள் தாளித்து சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.