தேவையானவை:
பச்சரிசி – 2 கப்,
உளுத்தம் பருப்பு – கால் கப்,
பாகு வெல்லம் – இரண்டே கால் கப்,
நெய், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு,
எண்ணெய் – கால் கிலோ.
செய்முறை:
உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, களைந்து உலர்த்திய பச்சரிசி யுடன் சேர்த்து மாவாக அரைக்கவும்.
எண்ணெயை சூடாக்கி, இந்த மாவை தேன் குழலாக பிழிந்து எடுத்து, நொறுக்கி… நெய், ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதி வந்தவுடன் வடிகட்டி,
மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும்.
இதை, பொடித்த தேன்குழல் மீது விட்டு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.