நத்தை கிரேவி செய்வது எப்படி?





நத்தை கிரேவி செய்வது எப்படி?

0
‘வாகை சூட வா’ திரைப்படத்தில், ஒரு பாடல் காட்சியில் இனியா, வாத்தியார் விமலுக்கு நத்தை அவித்து சாப்பிடத் தருவார்.
நத்தை கிரேவி - Snail Gravy
முதல் முறை அந்தக் காட்சியைக் காணும் போது வியப்பாக இருந்தது. அட நத்தையைக் கூடவா சாப்பிடு வார்கள்? என்று ஒரே அதிசய மாகக் கூட இருந்தது.

ஆனால் இணையத்தில் நத்தை கறி என்று தேடிப்பார்த்தால் உலகம் முழுதும் மக்கள் விதம் விதமாக

நத்தையை ரசித்துச் சமைத்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.

நத்தை வேண்டு மானால் மெதுவாக ஊர்ந்து செல்லலாம். ஆனால் அதன் கறியோ தொண்டை க்குள் வழுக்கிக் கொண்டு இறங்கும் என்கிறார்கள்.

ஒரு முறை அதை உண்டு பழகியவர்கள். கிட்டத்தட்ட ஆய்ஸ்டர், ஸ்கைலாப், ஸ்குயிட் வெரைட்டி களைப்

போன்ற சுவை யுடனிருக்கும் நத்தை கறி மூலவியாதி க்கு நல்லது என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது.

சிலர் கடுமையான வறட்டு இருமலுக்கு இதை நல்ல மருந்து என்கிறார்கள்.

சரி நத்தை இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளிலும் ஒன்றே என்பதால், வாழ்நாளில் ஒரு முறையேனும்

நத்தையை ருசி பார்க்கும் ஆர்வம் இருப்பவர் களுக்கு அதை எப்படிச் சமைப்பது எனக் கற்றுத் தரும் முயற்சியே இந்த புதிய ரெசிப்பியின் நோக்கம்.
நத்தைகளின் வகை ;

நில நத்தை, கடல் நத்தை.

இதில் நில நத்தை என்பது மழைக் காலங்களில் காடு, கழனிகள், ஈரப்பதமான இடங்கள்

மற்றும் நன்னீர் ஏரி, குளம் போன்ற தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் கிடைக்கக் கூடியது.

பொதுவாக அதிக விஷத்தன்மை அற்றது. கடல் நத்தையில் கொடிய விஷம் கொண்ட வகைகளும் உண்டு.

அந்த விஷத்தன்மை அவற்றின் இரைகளைப் பிடிக்கவே பயன்படுத்தப் படுகிறது.

மனிதர்கள் தப்பித் தவறி கடல் நத்தைகளின் விஷக் கொடுக்குகளில் அகப்பட்டு விட்டார்கள் எனில் உயிராபத்து இல்லை யென்றாலும் பக்க வாதத்தில் கொண்டு விடும்.

அடடா... அதை ஏன் இப்போது சொல்கிறீர்கள்? நத்தையைப் பிடித்து சமைத்துச் சாப்பிடப் போகையில் இதென்ன அபச்சொல் என்று நினைத்து விடாதீர்கள்.

ஒன்றைத் தொடங்கும் முன் நன்மை, தீமை இரண்டையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமே!

இந்தியன் ஸ்பெஷல் நத்தை கிரேவி...

செய்முறை:

நம்மூரில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம்.

வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும் .
பிறகு ஓடுகளை உடைத்து நத்தைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி

ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு, அடுப்பை ஏற்றி அதில் பெரிய வாணலியை வைத்து

சமையல் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் அரிந்து போட்டு வதக்கி

அதனுடன் நைஸாக நசுக்கிய இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பிட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

நத்தை கறி வெந்து கொண்டே இருக்கும் போது அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

பிறகு நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப அரை லிட்டர் முதல் 1 லிட்டர் வரை தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.

இறுதியில் ஒரு கைப்பிடி பொறி கடலையை அப்படியே கல்லுரலில் நைஸாக அரைத்தோ,

அல்லது மிக்ஸியில் அரைத்தோ குழம்பு நன்றாகக் கொதித்து வரும் போது அதில் சேர்த்துக் கிளறவும்.

கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய கொத்து மல்லித் தளை தூவி இறக்கவும்.

இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.

மேலே சொன்னது ஆந்திரத்து பாட்டி ஸ்டைல் நத்தை குழம்பு.

கம்போடியன் ஸ்பெஷல் நத்தை கிரேவி செய்முறை...

இதையே கம்போடியன் ஸ்டைலில் செய்வ தென்றால் பொறி கடலை அரைத்துச் சேர்ப்பதற்கு பதிலாக

நிலக்கடலையை பாதியாக உடைத்துச் சேர்த்துச் சமைக் கிறார்கள் அங்கு. அதோடு நத்தையின் ஓட்டையும் அவர்கள் முழுதாக உடைப்ப தில்லை.
நம்மூரில் மீன்களை அப்படியே முழுதாகப் பொரிப்ப தென்றால் மேலே கீறித் தருவார்களே

அப்படி நத்தை யோட்டின் தலைப் பகுதியைக் கீறி ஓட்டை போட்டு அதனுள் நன்றாக

மசாலா இறங்கும் வண்ணம் செய்து அப்படியே ஓட்டுடன் சமைக்கிறார்கள் கம்போடியாவில்.

மற்றபடி ரெஸிப்பி என்னவோ இந்தியன் ஸ்டைல் தான். கறி நன்றாக வெந்து கிரேவி தயாரானதும்

உள்ளிருக்கும் நத்தை கறியை டூத்பிக்கால் சுண்டி இழுத்துச் சுவைக்கிறார்கள்.

அது கிட்டத்தட்ட நன்றாக வேக வைத்த நல்லி எலும்புக் குழம்பில் இருந்து மஜ்ஜையை உறிஞ்சிச் சுவைத்து உண்பதற்கு ஒப்பானதாக இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)