தேவையானப்பொருட்கள்:
தயிர் - 1 கப்
வேர்க்கடலை (பொடித்தது) - 1/2 கப்
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூண்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ற வாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை:
அரை கப் வறுத்த வேர்க் கடலையை எடுத்து, தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப் பாகப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு சிறு வாணலியில், மிளகு, சீரகம், கடுகு ஆகிய வற்றை ஒவ்வொன் றாகப் போட்டு, பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
ஆறியபின் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
கடைசியில் தேங்காய்த் துருவலையும் அத்துடன் போட்டு விழுதாக அரைத் தெடுக்கவும்.
தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்னர் அதில் வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
சிறு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.
கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயத் தூள், மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை
ஆகிய வற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பச்சடியில் கொட்டிக் கிளறி விடவும்.
கலந்த சாதம் மற்றும் கார அடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.