டேஸ்டியான இளநீர் இட்லி செய்வது எப்படி?





டேஸ்டியான இளநீர் இட்லி செய்வது எப்படி?

வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத தேவை. அது வெயிலின் வெப்பத்தைத் தனிக்கக் கூடிய இயற்கை நீர். வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது. 
டேஸ்டியான இளநீர் இட்லி செய்வது எப்படி?
அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர் தான் சரியான உதவுகிறது. உடலுக்குத் தேவையான பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன. 

இன்று பலருக்கும் இதயப் பிரச்னை, இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகள் பொட்டாசியத்தின் குறைப்பாடால் ஏற்படக் கூடியது. இதைத் தவிர்க்க இளநீர் தினமும் அருந்துவது நல்லது.

இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமாக கால்சியம் மற்றும் பொட்டாசியம்தான் அதிகமாகத் தேவைப்படும். அவர்களுக்கும் இந்த இளநீர் நல்ல மருந்தாக இருக்கும். சிறுநீரகக்கல் பிரச்னை வராமலும் தடுக்கும். 
ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாம். வெயிலில்லாத காலை மற்றும் மாலையில் அருந்துவதைத் தவிர்க்கலாம். கர்பிணிகள் உடலுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. 

ஆரோக்கியமாக இருக்கிறார் எனில் இளநீர் அருந்தலாம். அவர்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்னைகள், அதற்குரிய மருத்துவம் எடுத்துக் கொள்கிறார்கள் எனில் அவர்கள் இளநீர் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

இல்லையெனில் மகப்பேறு மருத்துவரின் அறிவுரைப்படி அருந்தலாம். சரி இனி இளநீர் பயன்படுத்தி டேஸ்டியான டேஸ்டியான இளநீர் இட்லி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
என்னென்ன தேவை?

இட்லி மாவு – ஒரு கிலோ

இளநீர் – ஒன்று அல்லது இரண்டு

எப்படிச் செய்வது?
டேஸ்டியான இளநீர் இட்லி செய்வது எப்படி?
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இளநீரைச் சேர்த்துக் கலக்கி அரைத்து வைத்து விட்டு, பின்பு இட்லிகளைச் சுட்டெடுக்கவும். இளநீர் இட்லி தயார்!!

இட்லி மாவு அரைக்க சில டிப்ஸ்கள்:

இட்லி மாவு அரைக்க, அரிசி ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி வரை நேரம் ஊறினால் போதும். அரைக்கும் போது, தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அரைக்க வேண்டும். 

மாவில் கைபடாமல் கரண்டியைப் பயன்படுத்தி அரைப்பது நல்லது. அப்போது தான் சீக்கிரம் புளிப்பது, நீண்ட நேரத்துக்குப் பிறகு புளிப்பது போன்ற பிரச்னை களைத் தவிர்க்க முடியும்.

அலுமினியம், ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் போன்ற பாத்திரங்களில் மாவை வைத்தால் சீக்கிரம் புளித்து போக வாய்ப்புள்ளது. அதனால், எவர்சில்வர் பாத்திரத்தில் வைப்பது நல்லது.
சிறுநீர் சார்ந்த அனைத்து பிரச்சனை களுக்கும் எளிய வழி ?
இட்லி ஊற்றுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு உளுந்தை அரைத்து, அரிசி மாவுடன் கலந்து இட்லி சுட்டாலே போதும். உளுந்தை ஊற வைக்கும்போதே, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கலாம்.

அடுப்புக்குப் பக்கத்தில் மாவை வைத்துப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். காரணம் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்து விடும். இட்லியின் ருசி அதன் புளிப்புத் தன்மையில் தான் இருக்கு. 

புளிப்பு சரியான அளவில் இருந்தால் தான் இட்லி ருசி நன்றாக இருக்கும்.
Tags: