பழங்களின் ராணி என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் !





பழங்களின் ராணி என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் !

பழங்களின் ராணி என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப் பகுதியில், தோட்டப்பயிராக வளர்க்கப் படுகிறது.
பழங்களின் ராணி
இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது.

தென் அமெரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.
இதை தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும்,

பல்வலி, தொற்று நோய் கிருமிகளையும், காளான்களையும் (ஊதணஞ்தண்) அழிக்க பயன்படுத்தினர்.

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர் களுக்கு, கண்கள் வறட்சி அடைந்து எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளா வார்கள்.

இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

மங்குஸ்தான் பழத்தில், எலும்புகளை பலப்படுத்தக் கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ குணங்கள் உள்ளன.
இந்த பழம், குழந்தைகளு க்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாக விளங்குகிறது.
மங்குஸ்தான் பழத்தில் உள்ள சதைப் பகுதியை எடுத்துக் கொண்டு சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து, பாகாக காய்ச்சி எடுக்க வேண்டும்.

தேவைப் பட்டால் சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எலும்புகள் பலவீனம்

எலும்புகள் பலம் குன்றி காணப்படுவது, எலும்பு தேய்மானம் போன்ற வற்றிற்கு, இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

வயதானவர் களுக்கு முழங்காலுக்கு கீழே ஏற்படும் பலவீனத்தை, பலப்படுத்து வதற்கு மங்குஸ்தான் உதவி செய்கிறது.

கால்களில் ஜீவனற்று இருப்பவர் களுக்கும், இது சிறந்த தீர்வாக இருக்கும்.
எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் !
நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்ச்சல், ரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு, உடல் மற்றும் மனச்சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவை களை குணமாக்க, மங்குஸ்தான் பழம் உதவுகிறது.
எலும்புகள் பலவீனம்
வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும், வயதாவதை நிதானப் படுத்தவும், தோல் சுருக்கத்தை குறைக்கவும்,

பாக்டீரியா மற்றும் வைரசுக்கு எதிர்ப்பாக வும் பயன்படுகிறது. உடல் சூட்டைத் தணித்து, தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. 
ரோஹைப்னால் மாத்திரை பெண்களே உஷார்
சீதபேதி ரத்தக் கழிச்சல் உள்ளவர் களுக்கு, 

மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சீதபேதி உடனே குணமாகும்.

மங்குஸ்தான் பழத்தை சுவைத்து சாப்பிட்டு அல்லது அதன் தோலை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து, 

சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமடையும். 
கிருமிகளைக் கொல்லும்.

சிறுநீர் நன்கு வெளியேற, மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அது மட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,

சூதக வலியை குணமாக்கும், தலை வலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.

மகளிருக்கு மங்குஸ்தான்: 
கிருமிகளைக் கொல்லும்
மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும், அதிக ரத்தப் போக்கை குறைக்க, மங்குஸ்தான் பழம் உதவுகிறது.

மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை, வாங்கி சாப்பிடுவது நல்லது அல்லது

மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடி செய்து, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், அதிக ரத்தப் போக்கு குறையும்.
Tags: